Wednesday, November 16, 2005

From a reader....

காலம் மூன்றிலும்

காத்திருந்தாய் வாய்ப்புக்காக - அந்த
காற்றையே தூது விட்டு, வாழ்க்கையெனும்
காதலின் பதிலறிய.

காரிருள், பனி இரவில், ஏனோ
காட்சியில் தோன்றிய பாதைகள்
காணாமல் போனதோ
கானல் நீராகி, பயணத்தில் தடங்களோ

காலையில் பனி விலக
காக்கையும் கானம் பாடும்
காண்போரின் மணம் குளிரக்
காய்ந்த மலரும் கண்பறிக்கும்- சிறு
காலைப்பணி மகுடம் சூடி. அந்த

காலையில் வாழ்த்துகிறேன் கனவுகள் மெய்ப்பட - ஏனெனில்
காட்டு வழியில்- கதிரவன்
காட்டும் வழியில், பயணங்கள் முடிவதில்லை

காலம் மூன்றிலும்

by Sai.


Thank you for your thoughts Sai.