Friday, April 01, 2005

நினைத்து பார்த்தேன்

என் மனம் உன்னை நினைத்து பறக்க
பகல் இரவு என்ன? என்னையே நான் மறக்க
நாள் முழுவதும் உன்னையே நினைக்க
இரவில் நீயென்றெண்ணி தலையனையை அனைக்க

உன் தோழிகளுடன் நீ களிப்புடன் சிரிக்க
என் மனச் சிறகு ஆனந்தத்துடன் விரிக்க
காதல் என் மனதைக் கட்டிப் பிடிக்க
உன்னிடம் நான் அதை சொல்ல துடிக்க
உன் மையிட்ட விழிகள் என்னை அழைக்க

உன் அழகினில் என் மனத்தை துளைக்க
என் மன ஆசையை உன்னிடம் உரைக்க
உன்னை நோக்கி தடுமாற்றத்துடன் நடக்க
எண்ணங்களை உன்னிடம் தயக்கத்துடன் விளக்க
உன் மெளனத்தின் சம்மதத்துடன் விவாகத்தை முடிக்க

என் மனம் உன்னை நினைத்து பறக்க
பகல் இரவு என்ன? என்னையே நான் மறக்க
நாள் முழுவதும் உன்னையே நினைக்க
இரவில் நீயென்றெண்ணி தலையனையை அனைக்க

இரு இரவுகள் தனியே காத்திருந்தான்
தாய் வீடுச் சென்ற மனைவிக்காக

Tuesday, March 29, 2005

தளராதே

வாழ்கையில் படிப்பது சில
உணர்ந்து அறிவது பல
யார் செய்த பாவம்
நீ ஏனோ பிறந்தாய்

உன்னால் முடிந்தவரை
நீ போராடினாய்
போராடுவாய்
மனம் தளராதே

அதனை மீறி விதி உன் கையில்
இல்லையடி மடப்பெண்ணே
குழப்பமின்றி தெளிந்து விளையாடு
சதுரங்கம் ஆடும் நீ, மறந்தாயே

நான் சொல்கிறேன், நம்பு
உன்னால் முடியும்
உணர்ந்து அறிவது பல
வாழ்கையில் படிப்பது சில