Tuesday, March 29, 2005

தளராதே

வாழ்கையில் படிப்பது சில
உணர்ந்து அறிவது பல
யார் செய்த பாவம்
நீ ஏனோ பிறந்தாய்

உன்னால் முடிந்தவரை
நீ போராடினாய்
போராடுவாய்
மனம் தளராதே

அதனை மீறி விதி உன் கையில்
இல்லையடி மடப்பெண்ணே
குழப்பமின்றி தெளிந்து விளையாடு
சதுரங்கம் ஆடும் நீ, மறந்தாயே

நான் சொல்கிறேன், நம்பு
உன்னால் முடியும்
உணர்ந்து அறிவது பல
வாழ்கையில் படிப்பது சில